Thursday, July 30, 2009

தமிழ் திரட்டிகளின் தொகுப்பு பட்டன்


உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும். தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.

தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம் தளத்தில் add செய்வதற்கு ஒரு buttonlaye எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .

உங்கள் பட்டன் பெறுவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

Friday, March 27, 2009

ரயில்வே கேட் அடைப்பு - தாய், சேய் பலி

தென்காசி: பிரசவத்தின் போது வலிப்பு ஏற்பட்டதை அடுத்து நெல்லை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனந்தபுரத்தை சேர்ந்த முருகன். இவரது மனைவி
கண்ணம்மாள் . இந்நிலையில் நேற்று கண்ணம்மாளுக்கு பிரவச வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு கண்ணாம்மாளுக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இந்நிலையில் தாய்க்கும் திடீரென வலிப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் உரிய நேரத்தில் நெல்லை செல்ல முடியவில்லை.

இந்நிலையில் வலிப்பு அதிகமானதை தொடர்ந்து கண்ணம்மாள் பாதி வழியில் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அதே ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகத்தின் தாமதம் மற்றும் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் தான் கண்ணம்மாளை காப்பாற்ற முடியாமல் போய்வி்ட்டது என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு, பிரகாஷ் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் சமாதானமடைந்து உடலை வாங்கி சென்றனர்.


கண்ணம்மாள். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தென்காசியை அடுத்த வடகரை உதயசெல்வன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வந்தார்.


source:http://thatstamil.oneindia.in/news/2009/03/27/tn-railway-gate-closed-mother-succumbed-to-post.html

இதயத்தின் பாதிப்பு !..


உன்னால்
ஏற்படும் பாதிப்பு
மிகவும் விநோதமானது !..

இதயத்தில்
பாதிப்பு இல்லை !..
பாதிப்பில் தான் இதயமே !..
---------------------------------------------------------------------------------
அன்பே ...!!!
உன்மேல் நான்
பாசமா வைத்தேன்

இல்லை
என் உயிரை வைத்தேன்

அதனால் தானோ
என் இதயத்தில்
இரத்தக் கசிவு..!!

Thursday, March 26, 2009

முதலும் நீயே !... முடிவும் நீயே !....

அரசியலில் எதுவும் நடக்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளளாம். எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் கொள்கைளை வளைத்துக் கொள்ளலாம்.
1998.

2001

அதிமுக கூட்டணியிலிருந்து படு வேகமாக வெளியேறியது பாமக. அப்போது டாக்டர் ராமதாஸ் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை இது...

"டாக்டர் ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி. தனது சொந்த நலன்ளுக்காக அவர் கூட்டணிகளை உருவாக்குவார், கூட்டணியிலிருந்து விலகுவார், கூட்டணிகளை உடைப்பார்"

2004

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.


2006


2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008
2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.
2009
2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது

இனி இவர்களின் நிலைமை

இவர்களை நம்பி இருக்கும் மக்களின் நிலைமை ...........
????????????????????????????????????????????????



Friday, March 20, 2009

புலிகளுக்கு சமர்ப்பணம் - சச்சின் !..

புலிகள் பாதுகாப்பு குறித்து நான் ஏற்கனவே ஓர் அறிவிப்பு கொடுத்துள்ளேன் .நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன . அனால் இப்பொழுது 1,700 புலிகள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .மாதத்திற்கு ஒரு புலி வேட்டையாட படுகிறது . நான் சிறுவனாக இருந்த பொழுது டினோசர் என்ற ஒரு மிருகம் இருந்தது ஆனால் தற்பொழுது இல்லை. அந்த நிலை புலிகளுக்கும் வந்து விட கூடாது .

நியூசீலாந்துக்கு எதிரான தனது சதத்தை புலிகளுக்கு சமர்ப்பணம் செய்வதாக சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

Monday, March 16, 2009

கவிதை வந்த காரணம் ?.


எத்தனைநாள்
பேனாவுடன் கண்விழித்தும்
வாராத கவிதை ?

உண் கடைக்கண்பார்வையில்
காட்டாறாய் உடைத்ததென்று
!..

அட்ரா சக்கை !.. அட்ரா சக்கை !.. அட்ரா சக்கை !..

வில்லு ஒடிந்த சோகம்… விஜய்க்கு வந்த கோபம்!

விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கோபம் வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது சில பத்திரிகையாளர்கள் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று.


எதற்காக விஜய்க்குக் கோபம் வரும்?
அது ஒரு பெரிய கதை… சின்னதாகச் சொல்ல முயற்சிக்கிறோம்.
அப்போது குமுதம் வார இதழின் ஆசிரியராக அமரர் சுஜாதா பொறுப்பு வகித்தார்.
விஜய் நடிக்க, அவர் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ‘ரசிகன்’ படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் விமர்சனம் குமுதத்தில் வெளியாகியிருந்தது.




படத்தையும் நாயகனையும் ஒரு காய்ச்சுக் காய்ச்சியிருந்தது குமுதம். சில இடங்களில் கொஞ்சம் ஓவராகவே காய்ச்சி விட்டார்கள். எப்படித் தெரியுமா?
“இவரெல்லாம் (விஜய்) ஒரு மூஞ்சி என்று காசு கொடுத்து படம் பார்க்க வேண்டிய தலை எழுத்து தமிழ் ரசிகனுக்கு…!” என்கிற ரீதியில்…

அவ்வளவுதான்… இதழ் வெளியான அடுத்த நாள் ஆட்டோக்களில் தனது தொண்டரடிப் பொடிகளுடன் குமுதம் அலுவலகம் முன்னாள் போய் இறங்கி, புரசைவாக்கமே அதிரும்படி எஸ்ஏசி ‘வூடு கட்ட’… அடுத்த இதழில் இப்படி எழுதியிருந்தது குமுதம்:

“இளைய தளபதி விஜய் ஒரு அழகான நடிகர். இளம் நாயகர்களில் அவரைப் போன்ற அழகும் நடிப்புத் திறமையும் உள்ளவர்கள் அரிது. அவரைப் பற்றி கடந்த இதழ் ரசிகன் விமர்சனத்தில் இடம்பெற்ற கருத்துக்களுக்கு வருந்துகிறோம்…”

இன்னொரு சமயம்…

விஜய்யின் கோபம் ஒரு பிரபல மாலை நாளிதழின் நிருபரையே வேலையை விட்டுத் துரத்தும் அளவுக்குப் போனது.

மாநிலத்தின் நம்பர் ஒன் நாளிதழின் சினிமா நிருபரைக் கூட, அனைத்துப் பத்திரிகையாளரும் கூடிய ஒரு சந்திப்பில் விரல் நீட்டி எச்சரித்து மிரட்டியவர் விஜய். சச்சின் படம் வெளியானபோது, கடுமையான விமர்சனம் செய்த தினமணி போன்ற முதல்நிலை நாளேடுகளின் நிருபர்கள்கூட மிரட்டப்பட்டனர்.

எதற்கு இவ்வளவு பலமான பீடிகை தெரியுமா… கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். இதில் நீங்கள் ‘தரிசிப்பது’ சாட்சாத் அதே ‘இளையதளபதி’ விஜய்யைத் தான்!

சமீபத்தில் தனது வில்லு படத்தைத் தூக்கி நிறுத்த விஜய்யும், பிரபு தேவாவும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் தியேட்டராக சுற்றுப்பயணம் செய்தார்கள் அல்லவா…

அப்போது நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது எடுத்த வீடியோ காட்சி இது. ஒரு நிருபர்,

‘எம்ஜிஆருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்வது ரொம்ப ஓவரா தெரியலையா?’
என்பது போல ஒரு கிண்டலான கேள்வியைக் கேட்டு வைக்க… அதற்கு பதில் சொல்ல முயற்சித்த விஜய், அடக்க முடியாமல் ஆத்திரப்பட்டு, தனது ரசிகர்களைத் திட்டுவது போல, நிருபர்களை மறைமுகமாகத் திட்டும் காட்சி இது.

இத்தனைக்கும் ரசிகர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை. அவர்களின் குரல் கூட கேட்கவில்லை. இதுவரை நடந்துள்ள விஜய் பிரஸ்மீடை அனைத்திலும் பங்கெடுத்துள்ளோம். எதிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. கல்யாண மண்டபத்துக்கு வெளியில் கூட அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைக் கவனிக்க.

விஜய் கோபத்தில் கத்தும்போது பிரபுதேவாவின் முக மாறுதல்களையும் கவனியுங்கள்!

குறிப்பு: விழா மேடைகளில் பரம சாதுவாய் காட்சி தரும் விஜய்யைக் கண்டவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

‘அட என்னய்யா இது… ஒரு மனுசனுக்கு கோபமே வராதா… இல்ல வரக்கூடாதா?’ என்று சிலர் கேட்கக் கூடும்.

எதனால் இந்த நிலை?

எம்ஜிஆர் அல்லது ரஜினி… இப்படி யாராவது ஒரு சூப்பர் ஸ்டாரின் நாற்காலிக்கு குறி வைப்பதால் வந்த அவமானத்தின் விளைவு இது. காதலுக்கு மரியாதை, லவ் டுடே, அட கில்லி வரை தன் பாணியில் தனக்கேற்ற கதைகளில் வெற்றிகளைப் பார்த்தவர்தானே விஜய்… அந்த ட்ராக்கை விட்டுவிட்டு அடுத்தவர் ட்ராக்கில் கண் வைத்தால் இடறத்தானே செய்யும்!

தி.மு.க.வில் சேர்கிறார் ராதாரவி!


‘உரிய மரியாதை இல்லை!’ - அதிமுகவிலிருந்து விலகும் ராதாரவி

சென்னை: அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைவேன் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த பின் இதை நிருபர்களிடம் கூறினார் ராதாரவி.

நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு ராதாரவி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த திடீர் சந்திப்புக்குக் காரணம் என்ன?
முதல்வர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை இன்று சந்தித்தேன்.

இது நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாமா?
ஆமாம். அப்படி எடுத்துக்கொள்ளலாம்.

அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று விலகக் காரணம்?
கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.

இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட ஜெயலலிதாவுக்கு மனமில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டேன்.

அ.தி.மு.க.வில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்களா?
தொண்டர்கள் கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை.

உங்களை போன்று வேறுயாரெல்லாம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்?
அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இன்னும் நிறைய பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவார்கள்.

தி.மு.க.வில் எப்போது இணைவீர்கள்?
விரைவில் முறைப்படி இணைவேன்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமுள்ளதா?
நான் அ.தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. அவர்களாகத்தான் சீட் கொடுத்தார்கள். இங்கேயும் அப்படித்தான். தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டால், போட்டியிடுவேன்.

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
40 தொகுதிகளிலும் என் பிரச்சாரம் கண்டிப்பாக இருக்கும், என்றார் ராதாரவி.
ஏற்கெனவே திமுகவில் ‘பிரச்சார பீரங்கி’யாக இருந்தவர்தான் ராதாரவி. ஆனால் அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுகவில் உரிய மரியாதை இல்லை என்று கூறி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக சைதை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே நடிகர் எஸ்எஸ் சந்திரனும் திமுகவிலிருந்து அதிமுகவுக்குப் போய் எம்பியானார். இப்போது அவரும் ராதாரவி வழியில் திமுகவுக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

அந்தரத்தில் சச்சின் !.......


கூட்டணி தர்மம் !...

இல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா?

சரத்: இல்லீங்க ராதிகா அரசி ஷூட்டிங் போய் இருக்காங்க!

இல.கனேசன்: எங்க கட்சி தொகுதி பங்கீட்டு விசயமாக பேச இருவர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்து இருக்கிறது, அதில் நானும் திருநாவுகரசும் இருக்கிறோம்!

சரத்: (மனசுக்குள் ஆள் இல்லாத கடையிலும் பொருப்பா டீ ஆத்துவீங்க போல) எங்கேங்க அவர் இல்லையா?

இல.கனேசன்: இல்லீங்க அவரு வேறு ஏதும் கட்சிக்கூட பேச முடியுமான்னு பார்க்க போய் இருக்கிறார்.

சரத்:சரி நேரா மேட்டருக்கு வருவோம்!

இல.கனேசன்: இருக்கிறது 40 தொகுதி, இதை எப்படி பிரிச்சுக்கிறது!

சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துவிடுங்க மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

இல.கனேசன்: அய் அய்! எங்களுக்கு 2 போதும் மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க இதுவரை எங்க கட்சியில் இருப்பது நானும் என் மனைவி ராதிகாவும் தான் இரண்டு பேருக்கு இரண்டு சீட் போதும்!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க உங்க மனைவி நடிக்கும் தொடரில் இருப்பவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட் கொடுத்தாலே நீங்க ஈசியா 38 சீட்டுக்குஆள் புடிச்சுடலாம்! எங்களால அது முடியாது!

சரத்: அட நீங்க வேற இன்னைக்கு அரசி தொடரை இயக்குரவங்க நாளைக்கு இருப்பாங்களான்னு டவுட்டா இருக்கு இதுல நீங்க சீட்டை அவுங்களுக்கு கொடுக்க சொன்னா,அதெல்லாம் சரி வராதுங்க, என் கட்சிக்கு 2 சீட் போதும், மீதிய நீங்க வெச்சுக்குங்க!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க எங்க கட்சிக்கு 2 சீட் போதும் மீதிய நீங்கதான் வெச்சுகனும்...

சரத்: இல்லீங்க அதெல்லாம் சரி வராது...கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கிட்டினால் முறிந்தது என்று ரிப்போட்டருக்கு சொல்லிடுங்க!எங்களுக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கு, எங்களுக்கு யார் சரியாக இரண்டு சீட் தருகிறார்களோ அவர்களோடுதான் நாங்கள் கூட்டணி! இல்லையேல் இரு தொகுதியில் மட்டும் நாங்களே போட்டி இடுவோம்!

நன்றி : ஜூனியர் விகடன் , குசும்பன்