Sunday, February 22, 2009

திருப்பூர் மாவட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

திருப்பூர்: தமிழகத்தின் 32வது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை, ஈரோடு மாவட்டங்களைப் பிரித்து புதிய திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டத் தொடக்க விழா இன்று மாலை திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் சூலூர் புதிய தாலுகாவையும் அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதிய கலெக்டர் சமயமூர்த்தி

திருப்பூர் மாவட்ட தனி அதிகாரியாக செயல்பட்டு வந்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பதவியேற்றுக் கொண்டார்.

No comments: