Tuesday, February 24, 2009

மேல்மலையனூரில் மயான கொள்ளை



செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று, மயானக் கொள்ளை நடந்தது.கோவிலில் இருந்து, விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் எழுந்தருளிய அங்காளம்மன், அங்கு நடந்த மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.மயானக்கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவித்தனர். கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வந்த போது, சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடிய பக்தர்கள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுத்தனர்.


அம்மன் வேடமிட்ட அரவாணிகள் தங்கள் மீது நடந்துச் சென்றால், தோஷம் நீங்கும் என கருதி, பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் படுத்தனர். அவர்கள் மீது அரவாணிகள் நடந்துச் சென்றனர். இதில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.200 ஆடுகளை கடித்து ரத்தம் குடித்த வாலிபர்கள்: ஆத்தூர்: சேலம் ஆத்தூர், வீரகனூர், கெங்க வல்லி உள்ளிட்ட பகுதிகளில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திருவிழாவை காண வந்தவர்கள் ஏறி நின்ற மரம் முறிந்து 50 பேர் காயமுற்றனர். 200 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை, வாலிபர்கள் வாயால் கடித்து குதறினர். சுவேதா நதிக்கரையில் உள்ள மயானத்தில் இப்பகுதி மக்கள் அங்காள பரமேஸ்வரியை அலங்காரம் செய்து வைத்து வணங்கினர். இதற்கு சுடுகாட்டில் இருந்த எலும்புகள், மற்றும் பல் ஆகியவற்றை எடுத்து அலங்கரித்தனர்.


தொடர்ந்து வணங்கி 200 க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை, வாலிபர்கள் வாயால் கடித்து குதறினர். பெண்கள் குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை கேட்டு ரத்தச்சோறு சாப்பிட்டனர். இந்த திருவிழாவை காண வந்த பக்தர்கள் வாத மரம் மீது ஏறி நின்றனர். இதில் மரம் முறிந்து விழுந்து 50 பேர் காயமுற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரத்தச்சோறு சாப்பிட்டால் வேண்டியது கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். சென்னை தண்டையார் பேட்டையில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயான கொள்ளையில் அரக்கனை வதம் செய்ய பிரம்மாண்ட மணல் சிற்பம். தயாராக வடித்து வைக்கப்பட்டிருந்தது.

Sunday, February 22, 2009

Slumdog Millionaire Soundtrack- Oscar Award Winning Song

திருப்பூர் மாவட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

திருப்பூர்: தமிழகத்தின் 32வது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை, ஈரோடு மாவட்டங்களைப் பிரித்து புதிய திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டத் தொடக்க விழா இன்று மாலை திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் சூலூர் புதிய தாலுகாவையும் அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதிய கலெக்டர் சமயமூர்த்தி

திருப்பூர் மாவட்ட தனி அதிகாரியாக செயல்பட்டு வந்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பதவியேற்றுக் கொண்டார்.

2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.. 'ஜெய் ஹோ'!!!


நியூயார்க்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், ஜெய் ஹோ விருதுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

சவுண்ட் மி்க்சி்ங்-பூக்குட்டிக்கு:

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார்.

மேலும் சிறந்த இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 5 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.