Friday, March 27, 2009

ரயில்வே கேட் அடைப்பு - தாய், சேய் பலி

தென்காசி: பிரசவத்தின் போது வலிப்பு ஏற்பட்டதை அடுத்து நெல்லை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனந்தபுரத்தை சேர்ந்த முருகன். இவரது மனைவி
கண்ணம்மாள் . இந்நிலையில் நேற்று கண்ணம்மாளுக்கு பிரவச வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு கண்ணாம்மாளுக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இந்நிலையில் தாய்க்கும் திடீரென வலிப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் உரிய நேரத்தில் நெல்லை செல்ல முடியவில்லை.

இந்நிலையில் வலிப்பு அதிகமானதை தொடர்ந்து கண்ணம்மாள் பாதி வழியில் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அதே ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகத்தின் தாமதம் மற்றும் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்ததால் தான் கண்ணம்மாளை காப்பாற்ற முடியாமல் போய்வி்ட்டது என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு, பிரகாஷ் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் சமாதானமடைந்து உடலை வாங்கி சென்றனர்.


கண்ணம்மாள். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தென்காசியை அடுத்த வடகரை உதயசெல்வன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வந்தார்.


source:http://thatstamil.oneindia.in/news/2009/03/27/tn-railway-gate-closed-mother-succumbed-to-post.html

இதயத்தின் பாதிப்பு !..


உன்னால்
ஏற்படும் பாதிப்பு
மிகவும் விநோதமானது !..

இதயத்தில்
பாதிப்பு இல்லை !..
பாதிப்பில் தான் இதயமே !..
---------------------------------------------------------------------------------
அன்பே ...!!!
உன்மேல் நான்
பாசமா வைத்தேன்

இல்லை
என் உயிரை வைத்தேன்

அதனால் தானோ
என் இதயத்தில்
இரத்தக் கசிவு..!!

Thursday, March 26, 2009

முதலும் நீயே !... முடிவும் நீயே !....

அரசியலில் எதுவும் நடக்கலாம். என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளளாம். எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் கொள்கைளை வளைத்துக் கொள்ளலாம்.
1998.

2001

அதிமுக கூட்டணியிலிருந்து படு வேகமாக வெளியேறியது பாமக. அப்போது டாக்டர் ராமதாஸ் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை இது...

"டாக்டர் ராமதாஸ் ஒரு சந்தர்ப்பவாதி. தனது சொந்த நலன்ளுக்காக அவர் கூட்டணிகளை உருவாக்குவார், கூட்டணியிலிருந்து விலகுவார், கூட்டணிகளை உடைப்பார்"

2004

2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.இந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.


2006


2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.ஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.

2008
2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.
2009
2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது

இனி இவர்களின் நிலைமை

இவர்களை நம்பி இருக்கும் மக்களின் நிலைமை ...........
????????????????????????????????????????????????