Monday, March 9, 2009

ஆந்திர தேர்தல் களத்தில் ஷகிலா!


சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் பல நேரங்களில் நிஜ காட்சிகள் அமைந்துவிடுகின்றன.
அதுவும் அரசியலில் கேட்கவே வேண்டாம்.
தூள் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலாவை மையப்படுத்தி ஒரு காட்சியை அமைத்திருப்பார் இயக்குநர் தரணி. ஷகிலா படம் ஒன்றுக்கு அமைச்சர் நற்சாட்சிக் கடிதம் தருவது போலவும், அதனால் அவர் பதவியே பறிபோவது போலவும் அந்தக் காட்சி இருக்கும்.
ஆனால் நிஜத்தில் அதெல்லாம் ஜுஜுபி என்பது போல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
கவர்ச்சி குண்டு ஷகீலாவை தேர்தல் களமிறக்குகிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி.ஆனால் அவர் வேட்பாளராக நிற்கவில்லை, தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்டார் பேச்சாளராக, பிரச்சாரகராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த முறை வெறும் பிரச்சாரத்துக்கு வரும் அவர், அடுத்து வரும் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறங்குவார் என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

கடந்த முறை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக - திமுக என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றியதோ, அவை அனைத்தையும் இந்த முறை அரங்கேற்றி வருகிறது தெலுங்குதேசம்.
ஆந்திராவில் ஏகப்பட்ட நட்சத்திரங்களை ஒவ்வொரு கட்சியும் வலை வீசி இழுக்கத் தொடங்கி விட்டன.
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் முக்கிய நட்சத்திரங்களை, மக்களை கவரக் கூடிய நட்சத்திரங்களை குறிப்பாக நடிகைகளை தங்களது பிரசார வட்டத்திற்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா இதில் முன்னணியி்ல இருக்கிறார். அவரது பிரசார ஸ்டைல் ஏற்கனவே பெருத்த அலைகளைப் பரப்பியுள்ளது. திருச்சானூரில் போட்டியிடும் அவர், தெருச்சண்டை, குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல முன்னணி நட்சத்திரமான திரிஷாவும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிலா-இளைஞர்களைக் கவரவாம்!!
இந்த நிலையில் தெலுங்கு தேசத்திற்காக வாக்கு சேகரிக்க கவர்ச்சிப் புயல் ஷகீலாவை அக்கட்சி இழுத்துள்ளது.
இளைஞர்களைக் கவரும் வகையில், அவர்களின் அபிமானத்தைப் பெற்ற (!!) முன்னணி நாயகி ஷகிலாவைக் களமிறக்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அக்கட்சி தெரிவி்த்துள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று தென்மாநில மக்களுக்கும் திரையில் ‘தரிசனம்’ தந்து வந்த ஷகிலா, ஆந்திர மக்களை நேரில் சென்று ஓட்டுக் கேட்டு அதிர்ச்சி தரப் போகிறாராம்.

No comments: