Friday, February 20, 2009

ஒரே எதிரி ! - மாதவன்


சினிமாவில் எனக்கு சக நடிகர்களோ இயக்குநர்களோ எதிரிகள் கிடையாது. என் ஒரே எதிரி திருட்டு விசிடிதான் என்கிறார் மாதவன்.

மாதவன் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், யாவரும் நலம். விக்ரம் கே.குமார் இயக்கி, பிக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் இது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

நீண்ட நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது என்றே கூறப்பட்டது. பின்னர் எப்படியோ தட்டுத் தடுமாறி பாடல் வெளியீடு வரை முன்னேறிவிட்டது.

விழாவில் இயக்குநர் பிரியதர்ஷன் வெளியிட ஆடியோவை வெளியிட, பிக் பிக்சர் தலைமை நிர்வாகி சுனிர் கேதர்பால் பெற்றுக் கொண்டார்.

விழாவில், நடிகர் மாதவன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், "இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒருவழியாக சமாளித்து ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டோம். தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் படம் தயாரானதால், தனித்தனியாக படப்பிடிப்பு நடந்தது. முதலில் தமிழில் நடித்துவிட்டு, இந்தி படத்துக்காக மீண்டும் நடித்தேன்.

இந்த படத்தின் கதை இந்தியாவிலும், ஹாலிவுட்டிலும் இதுவரை வராத படம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் படம் இரண்டாவது நாளே திருட்டு சிடியாக வரும்போது மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

சினிமாவில், எனக்கு எதிரி நடிகர்கள் அல்ல. திருட்டு வி.சி.டி.தான். இந்த தொழிலுக்கே மிகப் பெரிய எதிரி அது. இந்த படத்துக்கு அப்படி ஒரு எதிரி உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...", என்றார்.

No comments: