Friday, February 20, 2009

12 இடங்களில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை போட்டி

கோவை: லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். 12 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என புதிதாகப் பிறந்துள்ள கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சி துவக்க விழா கோவையில் பிரமாண்டமாக நாடைபெற்றது.

இந்த நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

இதனால் வரும் லோக் சபா தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.



இந்த நிலையில்,கொங்கு நாடு மக்கள் முன்னேற்றப் பேரவை மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதிதாக துவங்கப்பட்டுள்ள எங்கள் கட்சிக்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், ஆகிய கட்சிகள் வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அந்த அடிப்படையில் தான் நாங்கள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். லோக் சபா தேர்தல் குறித்தோ, கூட்டணி குறித்தோ அவரிடம் எதுவம் பேசவில்லை.

கோவை, நீலகிரி, பொள்ளாட்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய 12 தொகுதிகளில் கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை தனித்து போட்டியிடும் என்றார்.

No comments: