
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினை குறித்து பேச எழுந்தனர். ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரனை மட்டும் பேச அனுமதித்தார்.
இதையடுத்து ஞானசேகரன் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், காங்கிரஸ் கட்சி மீது விடுதலைப்புலி ஆதரவாளர்கள், இலங்கை தமிழர்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.
மதுரையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேசுவரன் அலுவலகம், நாச்சியப்பன் எம்.பி. அலுவலகம், வேலூரில் என் அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்டுள்ளன. சத்தியமூர்த்தி பவன் முன்பு இருந்த பேனர்கள் எரிக்கப்பட்டுள்ளன. சத்திய மூர்த்தி பவன் உள்ளே புகுந்து தகர்த்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்திராகாந்தி, சோனியா காந்தி படங்கள், சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்படுகின்றன.
பொதுக்கூட்டம் என்ற பெயரில் நெல்லையில் வழக்கறிஞர்கள் போர்வையில், சினிமா டைரக்டர் சீமானை வரவேற்று பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். கோர்ட்டுக்குள்ளும் புகுந்து தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டைரக்டர் சீமான் எல்லா பொதுக்கூட்டங்களிலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுகிறார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், சினிமாவில் பெண்களை கற்பழிக்கும் வில்லனை எதிர்க்கும் கதாநாயகனுக்கு பாராட்டி பரிசு கொடுக்கிறார்கள். ஆனால் பிரபாகரனை குறை சொல்வது ஏன்? என்று கூறி உள்ளார்.
இப்படிப்பட்ட பேச்சுகளை போலீசார் கேட்டுக் கொண்டிருப்பது ஏன்? புதுச்சேரியில் இப்படி பேசிய டைரக்டர் சீமானை அங்குள்ள போலீசார் கைது செய்ய முயன்று வருகிறார்கள்.
ஆனால் அவர் தமிழ் நாட்டுக்குள்ளும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதது ஏன்?
தொல்.திருமாவளவனும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருகிறார். இவர் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டும். யாருக்கோ பயந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா?
தமிழ்நாட்டில் அமைதி ஏற்படவும், காங்கிரசாரை பாதுகாக்கவும், விடுதலைப்புலிகள் ஆதரிக்கப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஞானசேகரன் பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி,
காவல்துறை யாருக்கும் பயப்படாது. யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். முதல் அமைச்சரிடமும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டைரக்டர் சீமான், புதுச்சேரியில் 12.2.09 அன்று பேசியது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக 5 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமானை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர், ராயப்பேட்டை, அந்தியூர், வேலூர், மதுரை அண்ணா நகரில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைதாகி உள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின்படியோ அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டப்படியோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அப்போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில், டைரக்டர் சீமான் புதுச்சேரியில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். நெல்லை பொதுக்கூட்டத்திலும் பேசி உள்ளார். அப்போது இந்த 5 போலீஸ்படை சீமானை கைது செய்யாமல் எங்கு போனது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவையும், டைரக்டர் சீமான் மோசமாக பேசி உள்ளார். என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?
ஆற்காடு வீராசாமி: டைரக்டர் சீமான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் என்றார்.
இதையடுத்து ஞானசேகரன் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், காங்கிரஸ் கட்சி மீது விடுதலைப்புலி ஆதரவாளர்கள், இலங்கை தமிழர்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.
மதுரையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேசுவரன் அலுவலகம், நாச்சியப்பன் எம்.பி. அலுவலகம், வேலூரில் என் அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்டுள்ளன. சத்தியமூர்த்தி பவன் முன்பு இருந்த பேனர்கள் எரிக்கப்பட்டுள்ளன. சத்திய மூர்த்தி பவன் உள்ளே புகுந்து தகர்த்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்திராகாந்தி, சோனியா காந்தி படங்கள், சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்படுகின்றன.
பொதுக்கூட்டம் என்ற பெயரில் நெல்லையில் வழக்கறிஞர்கள் போர்வையில், சினிமா டைரக்டர் சீமானை வரவேற்று பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். கோர்ட்டுக்குள்ளும் புகுந்து தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டைரக்டர் சீமான் எல்லா பொதுக்கூட்டங்களிலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுகிறார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், சினிமாவில் பெண்களை கற்பழிக்கும் வில்லனை எதிர்க்கும் கதாநாயகனுக்கு பாராட்டி பரிசு கொடுக்கிறார்கள். ஆனால் பிரபாகரனை குறை சொல்வது ஏன்? என்று கூறி உள்ளார்.
இப்படிப்பட்ட பேச்சுகளை போலீசார் கேட்டுக் கொண்டிருப்பது ஏன்? புதுச்சேரியில் இப்படி பேசிய டைரக்டர் சீமானை அங்குள்ள போலீசார் கைது செய்ய முயன்று வருகிறார்கள்.
ஆனால் அவர் தமிழ் நாட்டுக்குள்ளும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதது ஏன்?
தொல்.திருமாவளவனும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருகிறார். இவர் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டும். யாருக்கோ பயந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா?
தமிழ்நாட்டில் அமைதி ஏற்படவும், காங்கிரசாரை பாதுகாக்கவும், விடுதலைப்புலிகள் ஆதரிக்கப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஞானசேகரன் பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி,
காவல்துறை யாருக்கும் பயப்படாது. யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். முதல் அமைச்சரிடமும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டைரக்டர் சீமான், புதுச்சேரியில் 12.2.09 அன்று பேசியது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக 5 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமானை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர், ராயப்பேட்டை, அந்தியூர், வேலூர், மதுரை அண்ணா நகரில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைதாகி உள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின்படியோ அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டப்படியோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
அப்போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில், டைரக்டர் சீமான் புதுச்சேரியில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். நெல்லை பொதுக்கூட்டத்திலும் பேசி உள்ளார். அப்போது இந்த 5 போலீஸ்படை சீமானை கைது செய்யாமல் எங்கு போனது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவையும், டைரக்டர் சீமான் மோசமாக பேசி உள்ளார். என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?
ஆற்காடு வீராசாமி: டைரக்டர் சீமான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் என்றார்.

No comments:
Post a Comment