சென்னை சேப்பாக்கம். சிதம்பரம் மைதானத்தில், 1983 - 84 ஆம் ஆண்டில், கவாஸ்கர் அடித்த 236 ஓட்டங்களே இதுவரையில் அதிகபட்சமாக இருந்தது. அதை (மார்ச்சு, 28,2008) சேவாக் முறியடித்து மைதானத்தில் புதிய சாதனை செய்து இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

முதல் விக்கெட்டுக்கு ஜாபரும், சேவாக்கும் 213 அடித்தனர். மேலும் இரண்டாவது விக்கெட் விழுவதற்கு முன்னரே மீண்டும் மற்றொரு 234 ஓட்டங்களை இது வரை பெற்றுள்ளனர். இது ஒரு உலக சாதனை.லாரா மற்றும் பிராட்மேன் இருவர் மாத்திரமே உலகில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இரண்டுமுறை 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் வரிசையில் சேவாக் இன்று முதல் இணைந்துள்ளார்.278 பந்துகளில், 300 ஓட்டங்கள் எடுத்து அவர் லாரா, பிராட்மேன் வரிசையில் இணைந்தார்.41 முறை நான்கு ஓட்டங்களும், 5 முறை ஆறு ஓட்டங்களும் பெற்று இச்சாதனையைச் செய்து ஆடுகளத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். டிராவிட்டும் பொறுமையாக ஆடி சேவாக்குக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்.வலையுலக நண்பர்களின் பிரார்த்தனையின் உதவியுடன் 'வீரேந்திர சேவாக்' 300 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

வலையுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள்.குறைந்த பந்துகளில் 300 ரன்: சேவாக் சாதனைசென்னை சேப்பாக்கத்தில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் வீரேந்தர் சேவாக் 300 ரன் சேர்த்து புதிய உலக சாதனையைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை 300 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை சேவாக் பெற்றுள்ளார்.2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 52 ரன்களுடன் களத்தில் இருந்த சேவாக், இன்றைய ஆட்டத்தை அதிரடியாகத் துவக்கினார். மதிய உணவு இடைவேளைக்கு முன் தனது 14-வது சதத்தை பூர்த்தி செய்தார்.மறுமுனையில் ஆடிய ஜாபர் 73 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய டிராவிட் விக்கெட் சரிவு ஏற்படாமல் சேவாக்குடன் இணை சேர்ந்து விளையாடினார்.தேநீர் இடைவேளைக்கு முன் 200 ரன்களை (194 பந்துகளில்) சேவாக் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட 3வது இரட்டை சதம் இதுவாகும்.

சேவாக்கை வெளியேற்ற தென்ஆப்ரிக்க பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய சேவாக் 225 பந்துகளில் 250 ரன்களை கடந்தார்.இதற்கிடையில், மறுமுனையில் மிக நிதானமாக விளையாடிய டிராவிட் 151 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார்.இன்னிங்சின் 101-வது ஓவரில் சேவாக் 300 ரன்களை கடந்ததுடன், குறைந்த பந்துகளில் (278) 300 ரன் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.இதற்கு முன் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 362 பந்துகளில், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 300 ரன் எடுத்ததே அதிவேக முச்சதமாக கருதப்பட்டது.கடந்த 1932-33ம் ஆண்டில் வேல்லி ஹம்மண்ட் என்பவர் நியூசிலாந்துக்கு எதிராக 355 பந்துகளில் முச்சதம் கடந்ததாக கூறப்பட்டாலும், அதுகுறித்த ஆதாரங்கள் எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா ஆகியோர் மட்டுமே 2 முறை 300 ரன்களை கடந்துள்ளனர். இன்றைய போட்டியில் 300 ரன் அடித்ததன் மூலம் இப்பட்டியலில் 3-வது வீரராக சேவாக் இடம் பிடித்துள்ளார்.

No comments:
Post a Comment