Thursday, February 19, 2009

லாலு பிரசாத் ஆட்டிக்குட்டி பால் குடிக்காததால் தாய் ஆட்டை பிடித்த அதிகாரிகள்


மத்திய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத்துக்கு பரிசாக தரப்பட்ட ஆட்டிக்குட்டி பால் குடிக்காததால் தாய் ஆட்டை பிடித்த அதிகாரிகள், மதுரையில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
லாலு பிரசாத் கடந்த 8ஆம் தேதி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்க திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது அவருக்கு முக்காணியைச் சேர்ந்த சிலர் ஆட்டுக்குட்டியை பரிசாகத் தந்தனர். பரிசாக தந்த ஆட்டுக்குட்டியை லாலு டெல்லிக்கு கொண்டு சென்றார்.
அங்கு லாலுவின் பேரக் குழந்தைகளின் முழுநேர தோழனாக மாறிவிட்ட ஆட்டுக்குட்டி திடீரென பால் குடிக்க முறுத்ததால் உடல் நலம் பாதித்தது. தாய் பாசத்தில் குட்டி தவிக்கிறது. தாய் ஆட்டைக் கொண்டு வந்தால்தான் உடல்நிலை தேறும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
உடனடியாக தெற்கு ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்ட லாலுவின் உதவியாளர், விரைவாக தாய் ஆட்டை டெல்லிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.
லாலுவுக்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்தது யார் என்று ரயில்வே அதிகாரிகள் விசாரித்ததில், திருச்செந்தூர் அருகே உள்ள முக்காணியை சேர்ந்தவர்கள் ஆட்டுக்குட்டியை பரிசளித்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆத்தூர் போலீசார் உதவியுடன் முக்காணிக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள். அங்கு ஆட்டுக்குட்டியை பரிசளித்தவர்களிடம் கேட்டபோது, முடிவைத்தானேந்தலை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவரிடம் இருந்து குட்டியை விலைக்கு வாங்கயிதாக கூறினர்.
இதன்பின்னர் முடிவைத்தானேந்தலுக்கு 3 குவாலிஸ் காரில் சென்ற அதிகாரிகள், அந்த விவசாயியை சந்தித்து பேசினார்கள். ஆட்டுக்குட்டி பால் குடிக்காததை அறிந்த விவசாயி, தாய் ஆட்டை இலவசமாகவே கொடுத்தார். பின்னர் ஆட்டுடன் மதுரைக்கு அதிகாரிகள் புறப்பட்டனர்.
தாய் ஆடு இன்று குளு குளு ரயில் பெட்டியில் மதுரையில் இருந்து டெல்லிக்கு செல்கிறது.

No comments: