Monday, March 16, 2009

கூட்டணி தர்மம் !...

இல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையா?

சரத்: இல்லீங்க ராதிகா அரசி ஷூட்டிங் போய் இருக்காங்க!

இல.கனேசன்: எங்க கட்சி தொகுதி பங்கீட்டு விசயமாக பேச இருவர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்து இருக்கிறது, அதில் நானும் திருநாவுகரசும் இருக்கிறோம்!

சரத்: (மனசுக்குள் ஆள் இல்லாத கடையிலும் பொருப்பா டீ ஆத்துவீங்க போல) எங்கேங்க அவர் இல்லையா?

இல.கனேசன்: இல்லீங்க அவரு வேறு ஏதும் கட்சிக்கூட பேச முடியுமான்னு பார்க்க போய் இருக்கிறார்.

சரத்:சரி நேரா மேட்டருக்கு வருவோம்!

இல.கனேசன்: இருக்கிறது 40 தொகுதி, இதை எப்படி பிரிச்சுக்கிறது!

சரத்: எனக்கு 2 தொகுதி கொடுத்துவிடுங்க மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

இல.கனேசன்: அய் அய்! எங்களுக்கு 2 போதும் மீதி 38ல் நீங்க நின்னுக்குங்க!

சரத்: அதெல்லாம் முடியாதுங்க இதுவரை எங்க கட்சியில் இருப்பது நானும் என் மனைவி ராதிகாவும் தான் இரண்டு பேருக்கு இரண்டு சீட் போதும்!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க உங்க மனைவி நடிக்கும் தொடரில் இருப்பவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட் கொடுத்தாலே நீங்க ஈசியா 38 சீட்டுக்குஆள் புடிச்சுடலாம்! எங்களால அது முடியாது!

சரத்: அட நீங்க வேற இன்னைக்கு அரசி தொடரை இயக்குரவங்க நாளைக்கு இருப்பாங்களான்னு டவுட்டா இருக்கு இதுல நீங்க சீட்டை அவுங்களுக்கு கொடுக்க சொன்னா,அதெல்லாம் சரி வராதுங்க, என் கட்சிக்கு 2 சீட் போதும், மீதிய நீங்க வெச்சுக்குங்க!

இல.கனேசன்: அதெல்லாம் முடியாதுங்க எங்க கட்சிக்கு 2 சீட் போதும் மீதிய நீங்கதான் வெச்சுகனும்...

சரத்: இல்லீங்க அதெல்லாம் சரி வராது...கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கிட்டினால் முறிந்தது என்று ரிப்போட்டருக்கு சொல்லிடுங்க!எங்களுக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கு, எங்களுக்கு யார் சரியாக இரண்டு சீட் தருகிறார்களோ அவர்களோடுதான் நாங்கள் கூட்டணி! இல்லையேல் இரு தொகுதியில் மட்டும் நாங்களே போட்டி இடுவோம்!

நன்றி : ஜூனியர் விகடன் , குசும்பன்

No comments: