
‘உரிய மரியாதை இல்லை!’ - அதிமுகவிலிருந்து விலகும் ராதாரவி
சென்னை: அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைவேன் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த பின் இதை நிருபர்களிடம் கூறினார் ராதாரவி.
நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு ராதாரவி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த திடீர் சந்திப்புக்குக் காரணம் என்ன?
முதல்வர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை இன்று சந்தித்தேன்.
இது நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாமா?
ஆமாம். அப்படி எடுத்துக்கொள்ளலாம்.
அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று விலகக் காரணம்?
கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.
இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட ஜெயலலிதாவுக்கு மனமில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டேன்.
அ.தி.மு.க.வில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்களா?
தொண்டர்கள் கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை.
உங்களை போன்று வேறுயாரெல்லாம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்?
அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இன்னும் நிறைய பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவார்கள்.
தி.மு.க.வில் எப்போது இணைவீர்கள்?
விரைவில் முறைப்படி இணைவேன்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமுள்ளதா?
நான் அ.தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. அவர்களாகத்தான் சீட் கொடுத்தார்கள். இங்கேயும் அப்படித்தான். தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டால், போட்டியிடுவேன்.
தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
40 தொகுதிகளிலும் என் பிரச்சாரம் கண்டிப்பாக இருக்கும், என்றார் ராதாரவி.
ஏற்கெனவே திமுகவில் ‘பிரச்சார பீரங்கி’யாக இருந்தவர்தான் ராதாரவி. ஆனால் அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுகவில் உரிய மரியாதை இல்லை என்று கூறி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக சைதை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே நடிகர் எஸ்எஸ் சந்திரனும் திமுகவிலிருந்து அதிமுகவுக்குப் போய் எம்பியானார். இப்போது அவரும் ராதாரவி வழியில் திமுகவுக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
சென்னை: அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைவேன் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த பின் இதை நிருபர்களிடம் கூறினார் ராதாரவி.
நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களுக்கு ராதாரவி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த திடீர் சந்திப்புக்குக் காரணம் என்ன?
முதல்வர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை இன்று சந்தித்தேன்.
இது நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாமா?
ஆமாம். அப்படி எடுத்துக்கொள்ளலாம்.
அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று விலகக் காரணம்?
கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.
இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது ஒப்புக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட ஜெயலலிதாவுக்கு மனமில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டேன்.
அ.தி.மு.க.வில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்களா?
தொண்டர்கள் கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை.
உங்களை போன்று வேறுயாரெல்லாம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்?
அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இன்னும் நிறைய பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவார்கள்.
தி.மு.க.வில் எப்போது இணைவீர்கள்?
விரைவில் முறைப்படி இணைவேன்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமுள்ளதா?
நான் அ.தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. அவர்களாகத்தான் சீட் கொடுத்தார்கள். இங்கேயும் அப்படித்தான். தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டால், போட்டியிடுவேன்.
தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
40 தொகுதிகளிலும் என் பிரச்சாரம் கண்டிப்பாக இருக்கும், என்றார் ராதாரவி.
ஏற்கெனவே திமுகவில் ‘பிரச்சார பீரங்கி’யாக இருந்தவர்தான் ராதாரவி. ஆனால் அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுகவில் உரிய மரியாதை இல்லை என்று கூறி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக சைதை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்து எம்எல்ஏ ஆக்கினார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே நடிகர் எஸ்எஸ் சந்திரனும் திமுகவிலிருந்து அதிமுகவுக்குப் போய் எம்பியானார். இப்போது அவரும் ராதாரவி வழியில் திமுகவுக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment